Friday, June 8, 2007

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். இறுதி எச்சரிக்கை!

குளோபல் வார்மிங் - GLOBAL WARMING

ஐபிசிசி (INTERGOVERMENTAL PANEL ON CLIMATE CHANGE) அமைப்பின் விஞ்ஞானிகள் மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கடந்த மே மாதம் நடந்து முடிந்திருக்கிறது.

அதில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி பத்து லட்சத்தில் 400 பகுதிகளாக இருக்கிறது. இது 2015ல் 445 என்பதாக உயரும். அப்போது 3.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் கூடுதலாகும். இப்படியே போனால் 2100ம் ஆண்டில் 11 டிகிரி பாரன்ஹீட் என்று உயர்ந்துவிடும். 445 என்பதிலேயே என்று இந்த பூமியை காப்பாறி வைத்தால்கூட, 2050ம் ஆண்டில் இரண்டு மில்லியன் மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்காது. அரிய வகை உயிரினங்கள் 20-30 சதவிகிதம் அழியக்கூடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். 2050 ஆண்டு என்பது வெகுதூரத்தில் இல்லை. உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க உங்களால் முடிந்த நடவடிகைகளை எடுங்கள்.