Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



இனிய வாழ்த்துக்களுடன்,




ஆதிபகவன்

Monday, January 14, 2008

2008ம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும்!!

2008ம் ஆண்டு என்னவெல்லாம் நடக்கும் என்று கனடாவில் வசிக்கும் Douglas Cottrell என்பவர் கூறுவதைப் பாருங்கள். அவர் டிசம்பர் 31ம் 2007ல் இவற்றைக் கூறிவிட்டார். வேலைப்பளு காரணமாக ப்ளாக்கில் சற்று தாமதமாக பதிவு செய்கிறேன்.

இவரை “The man with the X-ray eyes” என்று கூறுகிறார்கள். CFRB 1010 ரேடியோ Talk Showவில் இவரது பேட்டி இடம் பெற்றது. அவர் கூறியதை வரிசைப் படுத்தியிருக்கிறேன் பாருங்கள். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

1. ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்வெற்றி பெறுவார்.

2. ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி கொர்பச்சேவ் மீண்டும் அரசியலுக்கு வருவார்.

3. பின்லாடன் உயிருடனோ பிணமாகவோ பிடிபடுவார்.

4. தவறுதலாக ஒரு அணுவெடி விபத்து மத்தியகிழக்கு நாடுகள் அல்லது பாகிஸ்தான் எல்லையில்இடம்பெறும்.

5. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $900 மேல் உயரக்கூடும்.(இது நடந்துவிட்டது)

6. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸை கொலை செய்ய ஒரு முயற்ச்சி நடக்கக்கூடும்.
இம்முயற்ச்சி ஒரு பேட்டியின் போது ஏற்படலாம். அப்பொழுது அவரது அப்பாவும்(முன்னால் ஜனாதிபதி) அருகில் இருக்கக்கூடும்.

7. ஆபிரிக்காவில் இதுவரை வைரங்கள் கண்டுபிடிக்கப்படாத ஒரு நாட்டில் வைரங்கள் கிடைக்கக்கூடும்.

8. கனடாவின் மேற்க்குக்கரையை (பிரிட்டிஷ் கொலம்பியா) சுனாமி தாக்கக்கூடும். இது ஒரு வருஷத்திற்க்கு சற்று மேலான காலத்தில் நடைபெறும்.

9. அதிக அளவிலான அமெரிக்கர்கள் கனடாவில் குடியேறுவார்கள்.

10. மசகு எண்ணையின் விலை ஒரு பாரல் $140-$150 வரை உயரக்கூடும்.

11. கலிபோர்னியாவின் கவர்னர் ஆர்னோல்ட் மாரடைப்பினால் பாதிக்கப்படுவார்.

12. கனடாவில் தற்பொழுது 6% இருக்கும் வட்டிவிகிதம் 30%வரை உயரக்கூடும்.

13. கனேடிய வரிவிதிப்பில்(GST)மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும்.(பிரதமர் ஹார்ப்பர் 7%லிருந்து 5% ஆக வரியை குறைத்திருந்தார். இனிமேல் வரியில் எதுவும் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சிலவற்றை Douglas Cottrell கூறியிருந்தார். அவை அதிக முக்கியமில்லாததால் விட்டுவிட்டேன்.

இவர் கூறியதை எல்லாம் நம்புவதா இல்லையா என்று தெரியவில்லை. சில சம்பவங்கள் நடக்கலாம்.(காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுபோல்).

இவரைப்பற்றி இணையத்தளத்தில் தேடினால் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

இனி நம்புவது உங்கள் இஷ்டம்

Saturday, August 4, 2007

ஆகஸ்ட்மாத புகைப்பட போட்டிக்கு எனது படங்கள்........



எனது தம்பி பையன்









இது என்னோட பையன்



பாருங்க..............பார்த்திட்டு எதுவும் சொல்லாமல் போயிடாதீங்க.

ஒரு நாலு வார்த்தை தட்டீட்டு போங்க.


Friday, June 8, 2007

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். இறுதி எச்சரிக்கை!

குளோபல் வார்மிங் - GLOBAL WARMING

ஐபிசிசி (INTERGOVERMENTAL PANEL ON CLIMATE CHANGE) அமைப்பின் விஞ்ஞானிகள் மாநாடு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கடந்த மே மாதம் நடந்து முடிந்திருக்கிறது.

அதில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி பத்து லட்சத்தில் 400 பகுதிகளாக இருக்கிறது. இது 2015ல் 445 என்பதாக உயரும். அப்போது 3.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் கூடுதலாகும். இப்படியே போனால் 2100ம் ஆண்டில் 11 டிகிரி பாரன்ஹீட் என்று உயர்ந்துவிடும். 445 என்பதிலேயே என்று இந்த பூமியை காப்பாறி வைத்தால்கூட, 2050ம் ஆண்டில் இரண்டு மில்லியன் மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்காது. அரிய வகை உயிரினங்கள் 20-30 சதவிகிதம் அழியக்கூடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சற்றே சிந்தித்து நடந்து கொள்ளுங்கள். 2050 ஆண்டு என்பது வெகுதூரத்தில் இல்லை. உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க உங்களால் முடிந்த நடவடிகைகளை எடுங்கள்.

Saturday, May 5, 2007

பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்ள அரசியல் நடவடிக்கை அவசியம் - சர்வதேச மாநாட்டில் கருத்து

உலகில் ஏற்பட்டு வரும் பருவ நிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள உலகில் போதுமான நிதி மற்றும் இதற்கான அறிவுத் திறன் இருப்பதாகவும், ஆனால் இதை உடனடி அரசியல் நடவடிக்கையின் மூலமே செயல்படுத்த முடியும் எனவும் சர்வதேச விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு ஒன்று முடிவு கூறியுள்ளது.

உலகில் எரிபொருளின் உபயோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், அணு மின்சக்தி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், உலக வெப்பம் அதிகமாவதை இரண்டு பாகை செல்சியஸ் அளவிற்கு கட்டுப்படுத்தி வைக்கலாம் என ஐ நாவின் பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான உயர்மட்டக் குழுவின் மாநாடு கூறியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற நுகர்வோர் வாழ்க்கை முறையினை வளர்ந்து வரும் நாடுகளும் பின்பற்ற முனைந்தால், அதை பூமி சமாளிக்க இயலாது எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா எரிசக்தியைப் பயன்படுத்துவதைப் பின்பற்றி தாங்களும் அதேபோல செய்ய விரும்பவில்லை என மாநாட்டில் பங்குபெறும் சீனப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

நன்றி: பிபிசி